கொரோனா வைரஸால் தற்போது சின்னத்திரை, வெள்ளித்திரை படப்பிடிப்புகள் முடங்கியுள்ளன. தினக்கூலி பணியாளர்கள் உணவுக்கு வழியில்லாமல் திண்டாடும் நிலை எழுந்துள்ளது.
இது ஒரு பக்கம் இருக்க அண்மையில் நடிகர் விசு, சேது, பரவை முனியம்மா என பலர் உயிரிழந்தனர். இது திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் மலையாள சினிமாவை சேர்ந்த பிரபல இசையமைப்பாளர் எம்.கே.அர்ஜுனன் கொச்சியில் உடல் நலக்குறைவால் காலமானதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
83 வயதுடைய அவர் 50 வருடங்களாக சினிமாவில் இருந்து வந்து 200க்கும் அதிகமான படங்களில் 500 பாடல்களுக்கு இசையமைத்துள்ளாராம்.
மேலும் இசைப்புயல் ரஹ்மான் முதன் முதலாக இவரிடம் தான் கீ போர்டு வாசிக்கும் பணியில் சேர்ந்தாராம். இந்நிலையில் அர்ஜூனனின் மரணம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து ஒலிவடிவமைப்பாளர் ரசூல் பூக்குட்டி ட்விட்டரில் இரங்கல் தெரிவித்து தன் அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.