தீவிர சிகிச்சைப் பிரிவில் பொரிஸ் ஜோன்சன்!

202004070138282356 Tamil News Boris Johnson has been taken to intensive care SECVPF
202004070138282356 Tamil News Boris Johnson has been taken to intensive care SECVPF

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள இங்கிலாந்து பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று இங்கிலாந்தில் முக்கிய தலைவர்களையும் தாக்கியது. இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் வைரஸ் தொற்றுக்கு ஆளானார். சிகிச்சைக்கு பிறகு தற்போது குணம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரை தொடர்ந்து 55 வயதான இங்கிலாந்து பிரதமர் பொரிஸ் ஜோன்சனுக்கும் கொரோனா வைரஸ் தாக்கி இருப்பது கண்டறியப்பட்டது.

உடனடியாக அவர் பிரதமர் அதிகாரபூர்வ இல்லத்தில் தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கொண்டார். 10 நாட்களுக்கு பின்னர் மீண்டும் அவருக்கு நோயின் அறிகுறி தென்பட்டதால் நேற்று காலை அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், பொரிஸ் ஜோன்சனின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் எற்படாமல் தற்போது அவரது உடல் நிலை மோசமடைந்து வருகிறது. இதனால், தற்போது அவர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.