மூடப்படவுள்ள தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம்!

Untitled 2
Untitled 2

இலங்கையின் பொருளாதார மத்திய நிலையமான தம்புள்ளை சந்தை மறு அறிவித்தல் வரும் வரை மூடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வியாபார சங்கத்தின் தலைவர் கூறியுள்ளார்.

குறித்த மத்திய நிலையம் கடந்த சில நாட்களாக மூடப்பட்டிருந்த நிலையிலேயே தற்போது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நாளைய தினம் பொருளாதார மத்திய நிலையம் திறக்கப்படுவதற்கு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நாட்டில் நிலவிவரும் அசாதாரண சூழ்நிலையை கருத்திற்கொண்டு குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.