தற்போதய சூழ்நிலையில் இலங்கையில் பல்வேறு இடங்களிலும் ஊரடங்கு சட்டத்தையும் மீறி செயற்பட்டமைக்காக பல மதுபான சாலைகள் சட்டரீதியாக (சீல் வைத்து) முற்றுகையிடப்பட்டுள்ளன.
குறித்த சம்பவம் தொடர்பில் மதுவரி திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் கபில் குமாரசிங்க கூறியுள்ளார்.
ஊரடங்கின்போது தமது இருப்புக்களில் இருந்த மதுபானசாலைகளில் இருந்து மதுபானங்களை விநியோகம் செய்தமை மற்றும் அவற்றை அதிக விலைக்கு விற்பனை செய்தமை போன்ற குற்றச்சாட்டுக்களின் அடிப்படையிலேயே இந்த மதுபானசாலைகள் சட்டரீதியாக முற்றுகையிடப்பட்டன என அவர் தெரிவித்துள்ளார்.
நாளாந்தம் மதுபானசாலைகள் தொடர்பில் தமக்கு முறைப்பாடுகள் கிடைத்து வருவதாக மது வரித்திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.