பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்களுக்கு மரணதண்டனை – சஜித் தெரிவிப்பு

Sajith 2
Sajith 2

பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடைய அனைவருக்கும் மரணதண்டனை வழங்கப்படும் என புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இதனூடாக நாட்டில் பயங்கரவாதம் முற்றாக இல்லாதொழிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நிட்டம்புவ பகுதியில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனை கூறியுள்ளார்.

இதேவேளை யுத்தத்தை நிறைவுக்கு கொண்டுவந்த பீல்ட் மார்ஷல் சரத் பொன்கோவுக்கு தமது ஆட்சியில் பாதுகாப்பு, சமாதானம் மற்றும் நல்லிணக்க அமைச்சு பதவி வழங்கப்படும் என ஜனாதிபதி வேட்பாளர் அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் போதைப் பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை வழங்கப்படும் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வலியுறுத்திய போது , அதனை ஐக்கிய தேசியக் கட்சி ஒரு போதும் ஏற்றுக்கொள்ளாது என கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.