திருநாவற்குளம் பகுதியில் மோதல்! மூவர் காயம்!

v
v

வவுனியா – திருநாவற்குளம் பகுதியில் நேற்றிரவு மோதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வாய்த்தர்க்கம் முற்றிக் கைகலப்பாக மாறியதனாலேயே இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது காயமடைந்த மூவர் சிகிச்சைகளுக்காக வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மோதல் சம்பவத்தின் போது அருகிலிருந்த சில வீடுகளின் மீது கற்களை வீசி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ள தாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள பொலிஸார், சந்தேகநபர்களைக் கைது செய்வதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.