அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தன்னுடைய ஆதரவை
கோத்தாபய ராஜபக்ஷவுக்கு வழங்குவதற்குத் தீர்மானித்துள்ளார்.
மிரிஹான பிரதேசத்தில் உள்ள கோட்டாபய ராஜபக்ஸவின் இல்லத்திற்கு தமது சங்க உறுப்பினர்களுடன் நேற்று சென்று
அவரை சந்தித்து இதனை அறிவித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன் கடந்த சில பொதுத்தேர்தல்களில் யானைச்சின்னத்தில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட வேட்பாளர், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளார்.