ஈராக்கில் போரால் பாதிக்கப்பட்டுள்ள தங்களுக்கு அதிகமான வேலை வாய்ப்புகள் வேண்டும், ஊழல் ஒழிப்பு ஆகியவற்றை வலியுறுத்தி அங்கு மக்கள் போராடி வருகின்றனர்.
ஈராக்கில் அரசுக்கு எதிரான போராட்டங்களின் போது நிகழ்ந்த வன்முறைச் சம்பவங்களில் குறைந்தது 40 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த மாதத் தொடக்கத்தில் நடந்த இது போன்ற போராட்டங்களின் போது ஈராக் முழுவதும் சுமார் 150 பேர் இறந்தனர்.
ஈராக் மதகுருக்களும், ஐக்கிய நாடுகள் மன்றமும் வன்முறைகளைக் கைவிட அனைத்து தரப்புகளிடமும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மத உள்பிரிவுகளின் அடிப்படையில் அதிகாரம் பகிர்ந்து கொள்வதை ஷியா முஸ்லிம்கள் தலைமை வகிக்கும் அரசு நீக்க வேண்டும் என போராட்டக்காரர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.