எம்.பி.க்களின் ஓய்வூதியம் நிறுத்தம்- அனுரகுமார திஸாநாயக்க

anura kumara 1
anura kumara 1

தமது அரசாங்கத்தின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு 5 வருடத்தின் பின்னர் வழங்கப்படும் ஓய்வூதிய கொடுப்பனவை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப் போவதாக ஜனாதிபதி வேட்பாளர் அனுர குமாரதிஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தி அமைப்பின் ஜனாதிபதி வேட்பாளரது தேர்தல் விஞ்ஞாபனம் 8 அம்சங்களில் “தேசத்தின் எதிர்பார்ப்பு” எனப் பெயரிடப்பட்டிருந்த இந்த கொள்கைப் பிரகடனத்தை வெளியிட்டு வைக்கும் நிகழ்வு நேற்று (Oct.26) கொழும்பில் இடம்பெற்றது.