காலாவதியான பொருட் கொள்வனவு – விமான சேவை ஊழியர்கள் முறைப்பாடு

cope 1
cope 1

ஸ்ரீ லங்கன் விமான சேவையின் விமான பராமரிப்பு பொறியியலாளர் பகுதிக்கு காலாவதியான உபகரணங்களை கொள்வனவு செய்தமையினால் 2017 ஆம் ஆண்டில் 27.2 மில்லியன் நட்டம் ஏற்பட்டுள்ளதாக ஸ்ரீ லங்கன் விமான சேவை ஊழியர் சங்கம், அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவிற்கு (கோப்) முறைப்பாடொன்றை முன்வைத்தது.

குறித்த சங்கத்தின் பிரதிநிதிகள் இந்த முறைப்பாட்டை அண்மையில் பாராளுமன்றத்தில் கோப் குழுவின் தலைவர் சுனில் ஹந்துன்நெத்தி அவர்களை சந்தித்து எழுத்துமூலமாக கையளித்தனர்.

முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளவை

  • நிறுவனத்தின் நட்டத்திற்கு மத்தியில் உயர்மட்ட நிருவாகத்திற்கு இதுவரை நிறுவனத்தில் காணப்படாத புதிய பதவிகளை உருவாக்க நிருவாகத்தினர் நடவடிக்கை எடுத்துள்ளமை.
  • இதன் காரணமாக நிறுவனம் நட்டமடையும் நிலைமை மேலும் அதிகரித்துள்ளமை.
  • நிருவாகம் ஒரு சில தொழிற்சங்கங்கள் தொடர்பில் பக்கசார்பான கொள்கையை பின்பற்றி தொழிற்சங்க கட்டளை சட்டத்தையும் மீறி செயற்படுகின்றமை.
  • கொழுப்பில் இருந்த காரியாலயத்தை கட்டுநாயக்கவிற்கு மாற்ற ஏற்பட்டதாகவும், பின்னர் மீண்டும் அதனை கொழும்பிற்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்ததாகவும், இதனால் நிறுவனத்துக்கு பாரிய நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது.

அரச மற்றும் அரச சார்புத்துறை நிறுவனங்களில் இடம்பெறும் முறைகேடுகள் தொடர்பில் கோப் குழுவுக்கு முறைப்பாடுகள் போன்று குறைகளையும் முன்வைக்கும் சந்தர்ப்பம் தற்பொழுது ஏற்பட்டுள்ளது.

இதற்கு முன்பு சுற்றுலாத்துறை பிரதிநிதிகள் சிலர் அவர்கள் முகங்கொடுக்கும் சிக்கல்கள் தொடர்பில் கோப் குழுவுக்கு எழுத்து மூலம் முன்வைத்தமை குறிப்பிடத்தக்கது.