தன்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலும் எதிர்க்கட்சித்தலைவர் மஹிந்த ராஜபக்ஸவிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்காமை தொடர்பிலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களிற்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்க கடிதம் ஒன்றினூடாக அறிவித்துள்ளார்.
புதிய கட்சியொன்றை உருவாக்கி ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை அழிப்பதற்கு திட்டமிட்டது எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸவே ஆகும் தான் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு எந்தவொரு அநீதியையும் செய்யவில்லையெனவும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் போசகரும் முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பியுள்ள விசேட கடிதம் ஒன்றிலேயே அவர் இதனைக் தெரிவித்துள்ளார்.
அவ்வாறு இருந்தும் மஹிந்த ராஜபக்ஸவுக்கு எதிராக இதுவரையில் கட்சியினால் எந்தவொரு ஒழுக்காற்று நடவடிக்கையோ, வாக்கு மூலம் ஒன்றையோ பெற்றுக் கொள்ளப்படவில்லையெனவும் அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.