ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பாதுகாக்கும் அமைப்பின் விசேட சம்மேளன கூட்டம் இன்று

chandrika
chandrika

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பாதுகாக்கும் அமைப்பு இன்று (Nov.05) விசேட சம்மேளன கூட்டம் ஒன்றை கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆலோசகரும், முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையில் நடத்தவுள்ளது.

எவ்வாறாயினும் குறித்த கூட்டத்திற்கும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையில் எந்தவித தொடர்பும் இல்லை என அந்த கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.

இந்த கூட்டத்தில் கலந்துக்கொள்ளும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் கட்சியின் பதில் தவிசாளர் பேராசிரியர் ரோஹண லக்ஸ்மன் பியதாச தலைமையில் இன்று இடம்பெறவுள்ளது.