எம்.சி .சி ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டத்தரணிகள் எதிர்ப்பு

lawyers
lawyers

அமெரிக்காவுடன் – இலங்கை அரசாங்கம் இன்று (05) கைச்சாத்திடவுள்ள மிலேனியம் சாவால்கள் கூட்டுதாபனத்துடனான ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதை தவிர்த்துக்கொள்ளுமாறு, இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

அது தொடர்பில், அமெரிக்கா மற்றும் எம்.சி .சி நிறுவனத்துக்கு அறிவிக்குமாறும் அறிக்கையொன்றை வெளியிட்டு அந்த சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கு நிதயமைச்சுக்கு எந்தவித சட்டரீதியான அதிகாரங்களும் இல்லை என, இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன், இந்த விடயம் தொடர்பில் உடனடியாக கவனம் செலுத்துமாறு அந்த சங்கம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.