மட்டக்களப்பு- வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள தனியார் காணியொன்றிலிருந்து 80 வயதுடைய வயோதிப பெண்யொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்தவர், மண்முனை மேற்கு பிரதேசத்திலுள்ள ஊத்துமடு கிராமத்தைச் சேர்ந்த 80 வயதுடைய பூமணி என உறவினர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவரது மரணம் குறித்த மேலதிக விசாரணைகளை வவுணதீவு பொலிஸாரும் மட்டக்களப்பு குற்றவியல் பொலிஸாரும் இணைந்து முன்னெடுத்துள்ளனர்.