இலங்கை மின்சார சபையின் ஐம்பதாவது ஆண்டு விழாவை முன்னிட்டு வட மாகாண மின்சார சபை ஊழியர்கள் இரத்ததானம் செய்துள்ளனர்.
மின்சார சபையின் வட மாகாண ஊழியர் நலன்புரி மற்றும் விளையாட்டுச் சங்கத்தால் வட மாகாண மின்சார சபையின் தலைமை அலுவலகத்தில் இரத்ததான முகாம் இன்று நடாத்தப்பட்டது.
இவ் இராத்தான முகாமில் மின்சார சபையின் வட மாகாண உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் பலரும் கலந்த கொண்டு இரத்ததானம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.