பெண் காவலர்கள் பாராட்டியது மறக்க முடியாத அனுபவம் – ஸ்ரீபிரியங்கா

sripriyanga
sripriyanga

சுரேஷ் காமாட்சி இயக்கி தயாரித்துள்ள ‘மிக மிக அவசரம்’ என்ற படத்தில், பெண் காவலர் வேடத்தில் நடித்துள்ள ஸ்ரீபிரியங்கா சினிமாவுக்கு வந்து 5 வருடங்களுக்கு மேலாகி விட்டது என்றாலும், நினைத்த இடத்துக்கு இன்னும் வர முடியவில்லை என்று கூறியுள்ளார்.

இது குறித்து மேலும் அவர் கூறியதாவது;

மிக மிக அவசரம் படம், ஒரு பெண் காவலரின் வலியை சொல்லும் படம். பவானி பாலத்தில் 22 நாட்கள் கடும் வெயிலில் நின்று நடித்தேன். படத்தை பார்த்துவிட்டு பெண் காவலர்கள் பாராட்டியது மறக்க முடியாத அனுபவம். நான் சினிமாவுக்கு வந்து 5 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது.

ஆனால், நான் நினைத்த இடத்துக்கு இன்னும் வர முடியவில்லை. காரணம், நான் தமிழ் பெண். தமிழ் பேசத் தெரிந்த, தமிழ்நாட்டில் பிறந்த நடிகைகளை ஏன் புறக்கணிக்கிறார்கள் என்று புரியவில்லை’ என்று தெரிவித்துள்ளார்.