டிசம்பரில் நடைபெறவுள்ள ஐ.பி.எல் ஏலம்

IPL Auction
IPL Auction

2020இல் நடைபெறவுள்ள ஐ.பி.எல் கிரிக்கட் தொடரில் கலந்து கொள்ளவுள்ள வீரர்களை தெரிவு செய்வதற்கான ஏலம் கொல்கத்தாவில் டிசம்பர் மாதம் 19ம் திகதி நடைபெறும் என்று ஐ.பி.எல் நிருவாகம் அறிவித்துள்ளது.

இதுவரை பெங்களூருவில் நடைபெற்று வந்த ஐபிஎல் ஏலம் பி.சி.சி.ஐ இன் புதிய தலைவராக கங்குலி தெரிவுசெய்யப்பட்டதும் கொல்கத்தாவுக்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு நடைபெறும் ஏலம்தான் ஏற்கனவே இருக்கும் வீரர்களுக்கான கடைசி ஏலம், 2021 இல் நடைபெறவுள்ள ஏலத்தில் அனைத்து அணிகளும் கலைக்கப்பட்டு புதிதாக ஏலத்தில் வீரர்களைத் தேர்வு செய்யவுள்ளது.

எனவே 2021 இல் அனைத்து ஐ.பி.எல் அணிகளின் தோற்றமும் மாறிவிடும்.