பகல்-இரவு டெஸ்டில் டோனி வர்ணனையாளராக செயல்படமாட்டார்

msd
msd

இந்தியா – வங்காளதேசம் அணிகள் மோதும் 2வது மற்றும் கடைசி பகல்-இரவு டெஸ்ட் போட்டி எதிர்வரும் 22ம் திகதி கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இதனால் இந்த டெஸ்ட்டை மிகவும் சிறப்பாக நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது. பிரபலங்கள் அனைவரையும் இந்த போட்டிக்கு அழைத்து வர திட்டமிடப்பட்டுள்ளது.

இந்திய அணிக்கு 2 உலக கோப்பையை பெற்றுக்கொடுத்த தோனியை பகல் – இரவு டெஸ்ட்டில் சிறப்பு வர்ணனையாளராக செயல்பட வைக்க ஒளிபரப்பு நிறுவனமான ஸ்டார் ஸ்போர்ட்ஸ் திட்டமிட்டது.

இதற்காக அந்த நிறுவனம் பி.சி.சி.ஐ.யிடம் அனுமதி கேட்டது. ஆனால், பி.சி.சி.ஐ இதுவரை எந்த பதிலையும் தெரிவிக்கவில்லை.

இந்நிலையில் கொல்கத்தாவில் நடைபெறும் பகல் – இரவு டெஸ்ட் போட்டியில் தோனி வர்ணனையாளராக செயல்படமாட்டார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

தோனி இதுவரை ஓய்வு பெறாததால் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய ஓப்பந்த வீரராகவே உள்ளார். வர்ணனையாளராக செயல்பட்டால் இரட்டை ஆதாய பதவி குற்றச்சாட்டு தோனி மீது கூறப்படும். இதன் காரணமாக அவர் வர்ணனையாளராக பணியாற்ற மாட்டார் என தெரிவிக்கப்படுகிறது.