`மேயாத மான்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் பிரியா பவானி சங்கர்.
இவர் தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகும் மாஃபியா படத்தில் அருண்விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
இந்த படத்தில் சத்யா எனும் கதாபாத்திரத்தில் பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். அதிரடி படமாக உருவாகும் மாஃபியா படத்தில் பிரியா பவானி சங்கர் முதன்முறையாக சண்டைக் காட்சிகளில் நடித்துள்ளாராம். இப்படம் வருகிற டிசம்பர் மாதம் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் இந்தியன் 2, எஸ்.ஜெ.சூர்யாவின் பொம்மை என பிரியா பவானி சங்கர் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார்.