நடிகர் சங்கத்தை நிருவகிக்க பெண் அதிகாரி நியமனம்- தமிழக அரசு நடவடிக்கை

keetha
keetha

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கான தேர்தல் முடிவடைந்து விட்டாலும், வாக்குகள் இன்னும் எண்ணப்படாமல் இருக்கிறது. இது தொடர்பாக வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், இன்று தமிழக அரசின் முதன்மை செயலாளர் கே.பாலச்சந்திரன் வெளியிட்டுள்ள உத்தரவில் சங்கங்களுக்கான பதிவுத்துறை உதவி ஆய்வாளர் கீதா கோபிநாத் தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கான சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்படுவதாக அறிவித்துள்ளது.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கு ஏற்கனவே தமிழக அரசு சார்பில் சேகர் என்ற தனி அதிகாரி நியமிக்கப்பட்டு செயல்பட்டு வரும் நிலையில் நடிகர் சங்கமும் தமிழக அரசின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளது.