அண்ட்ரியாவின் புத்தக வெளியீட்டிற்கு மிரட்டல்

andriya
andriya

திருமணமான ஒருவருடன் ஏற்பட்ட தகாத உறவினால் தனக்கு ஏற்பட்ட துன்பங்கள் தொடர்பிலும் தன்னை மோசம் செய்தவர் பற்றிய தகவல்களை தான் எழுதும் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளதாகவும் குறித்த புத்தக வெளியீட்டிற்கு தனக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் நடிகை அன்டிரியா நிகழ்ச்சியொன்றில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலம் தெரிவிக்கையில்

“திருமணமான ஒருவருடன் தகாத உறவு ஏற்பட்டு மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் துன்புறுத்தலுக்கு ஆளானேன் என்றும் இப்போது ஆயுர்வேத சிகிச்சை பெற்று மீண்டு வந்து இருக்கிறேன் என்றும் கூறினார்.

தன்னை மோசம் செய்தது யார்? என்ற தகவலை, தான் எழுதும் புத்தகத்தில் குறிப்பிட்டு இருப்பதாகவும் தெரிவித்தார். அந்த புத்தகம் சில வாரங்களுக்கு முன்பே வெளியாகும் என்று எதிர்பார்த்து இதுவரை வெளிவரவில்லை. புத்தகத்தை வெளியிடக் கூடாது என்று திருமணமான முன்னாள் காதலர் ஆண்ட்ரியாவை மிரட்டுவதாகவும் தகவல் வெளியானது.

அந்த நபர் அரசியலில் தொடர்பு உள்ளவர் என்றும் தற்போது சினிமாவில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. எதிர்ப்பை மீறி புத்தகத்தை வெளியிடும் முயற்சியில் ஆண்ட்ரியா ஈடுபட்டார். ஆனாலும் புத்தகம் வெளியாகவில்லை. அவருக்கு மீண்டும் மிரட்டல்கள் வந்து இருப்பதாக சமூக வலைத்தளத்தில் தகவல் பரவி வருகிறது.