சோமாலியாவில் கனமழை- 25 பேர் உயிரிழப்பு

somaliya
somaliya

சோமாலியா நாட்டில் கடந்த சில தினங்களாக பெய்து வருகின்ற கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளத்தினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

மழைவெள்ளம் காரணமாக பொதுமக்கள் 25 பேர் உயிரிழந்தனர். மேலும் 47 பேர் காயமடைந்தனர் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

5,47,000-க்கும் அதிகமான மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,32,000 பேர் சொந்த இருப்பிடங்களை விட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் இன்னும் ஒரு வாரத்திற்கு மழை நீடிக்கும் என சோமாலியா நீர் மற்றும் நில தகவல் மேலாண்மை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.