புல்புல் புயல்- இருவர் உயிரிழப்பு

bul bul
bul bul

வங்கக் கடலில் அந்தமான் அருகே உருவான காற்றழுத்த தாழ்வு நிலை புதிய புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு ‘புல்புல்’ என பெயரிடப்பட்டது. ‘புல்புல்’ புயல் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்தது.

இந்நிலையில், இன்று அதிகாலை 2.30 மணியளவில், புல்புல் புயல் கடலோர மேற்கு வங்காளம் மற்றும் பங்களாதேஷ் நாட்டை ஒட்டிய பகுதியில் கரையை கடந்தது.

புல்புல் புயல் காரணமாக கொல்கத்தா, ஒடிசா பகுதிகளில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

தேசிய பேரிடர் மேலாண் படையை சேர்ந்த 17 குழுவினர் மேற்கு வங்காளத்திலும், 6 குழுவினர் ஒடிசாவிலும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர் என உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.