தமிழ் மக்களுக்காக விசேட தியாகங்களை செய்யத் தயார் – விமல்

vimal
vimal

கோத்தாபய ராஜபக்ஷவின் வெற்றியில் தமிழ் மக்களின் முழுமையான பங்களிப்பு இருக்க வேண்டும் எனவும் அதற்காக தமிழ் மக்களுக்கு விசேட தியாகங்களை செய்ய தாம் தயாராக உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச நேற்று (Nov.10) கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

நிறைவேற்ற முடியாத ஐந்து காரணிகளில் தமிழ் சிங்கள மக்கள் மோதிக்கொள்வதை விடவும் முடியுமான நூறு விடயங்களில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டும் என்றும் கூறினார்.