பாராளுமன்றத்தின் விசேட அமர்வு இன்று

Karu jayasooriya
Karu jayasooriya

பாராளுமன்றத்தின் விசேட அமர்வு இன்று இடம்பெறவுள்ளது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கோரிக்கைக்கு அமைவாக இந்த அமர்வு இடம்பெறவுள்ளது. இதில் கலந்துகொள்ளுமாறு சபாநாயகர் கருஜயசூரிய அறிக்கை ஒன்றை விடுத்து அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதற்கு அமைவாக இன்று காலை 11.30 இற்கு பாராளுமன்றத்தின் விசேட அமர்வு இடம்பெறவுள்ளது. இதற்கு முன்னர் டிசம்பர் மாதம் 3 ஆம் திகதி வரையில் ஒத்திவைக்கப்படுவதாக பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான தெரிவுக்குழு தீர்மானித்திருந்தது.

இருப்பினும் விளையாட்டுத்துறை தொடர்பிலான தவறுகளை தடுக்கும் திருத்த சட்டமூலம் உடனடியாக விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப் படவேண்டும் என்று ஆளும் தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ச்சியா முன்வைத்தக கோரிக்கைக்கு அமைவாக இன்றைய தினம் விசேட பாராளுமன்ற அமர்வு நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.