ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் பிரஜாவுரிமை தொடர்பில் எந்தவித உத்தியோகபூர்வ அறிவிப்பையும் விடுக்க முடியாதுள்ளதாக இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பில் அமெரிக்க தூதரக அதிகாரி ஒருவர் இது தொடர்பில் தெரிவிக்கையில்;
அமெரிக்காவின் தனிப்பட்டவர்களுக்குள்ள சட்ட திட்டங்களுக்கு ஏற்ப, பிரஜாவுரிமை அல்லது குடிவரவு குடியகல்வு விடயங்கள் தொடர்பான விடயங்கள் தொடர்பில் எந்தவித அறிவிப்பையும் தூதரகத்தினால் மேற்கொள்ள முடியாதுள்ளமையினால் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் பிரஜாவுரிமை தொடர்பிலும் எந்தவொரு உத்தியோகபூர்வ அறிவிப்பும் மேற்கொள்ள முடியாதுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அமெரிக்க குடிமகன் என்று பரவிவரும் வதந்தியில் எவ்வித உண்மையும் இல்லை என கோத்தாபயவின் சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.