தேர்தலுக்கு செலவு செய்வது எப்படி?- ராஜித

rajitha sena
rajitha sena

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியினர் இந்த ஜனாதிபதித் தேர்தலுக்காக பாரியளவில் செலவு செய்து வருவதாகவும், எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு எவ்வாறு அப்படி செலவழிக்க முடியும்? எனவும் அமைச்சர் ராஜித சேனாரத்ன கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட பெருந்தொகைத் தங்கத்தை உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் பதுக்கி வைத்தே தற்போது தேர்தல் பிரசாரங்களை அவர்கள் முன்னெடுத்து வருவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பு, கிருலப்பனையில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக அமைப்பின் அலுவலகத்தில் நேற்று(10) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

இத்தனைக்கும் ஜனாதிபதித் தேர்தல் முடிந்ததும், எதிர்வரும் 17 ஆம் திகதி முதல் மீண்டும்  அனைத்து விசாரணைகளும் ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.