வெள்ளைவான் கடத்தல்கள் – கிரைம் அதிர்வு

01 White
01 White

கோத்தபாயவின் வெள்ளைவான் கடத்தல்களை அம்பலப்படுத்திய அதன் சாரதி குருதி உறையவைக்கு திகில் சம்பவங்களையும் வெளியிட்டுள்ளார்.

அதன்படி கடத்தப்படுபவரை எப்படி சித்திரவதை செய்து, கொலை செய்தார்கள் என்ற தகவல்களை அந்த நபர் நேற்ரு நடத்திய செய்தியாளர் சந்திப்பில் வெளியிட்டுள்ளார்.

அந்தோனி பெர்னாண்டோ எனும் குறித்த நபர் , தானும் இரண்டு வெள்ளைவான் கடத்தல்களில் தொடர்புபட்டிருந்ததாகவும், அதில் ஈடுபட மனச்சாட்சி இடம்கொடாததை தொடர்ந்து அதிலிருந்து வெளியேறி விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், கடத்தப்படுபவரை ஒரு வாகனத்தில் தூக்கி, இன்னொரு வாகனத்தில் கொண்டு செல்வோம் என்றும் கூறிய அவர் கோட்டாபய ஐயாதான் வெள்ளைவான் சூத்திரதாரி என்றும் கூறியுள்ளார்.

அந்தவகையில் தெற்கில் புத்தளம், மொனராகல, வெல்லவாய, கதிர்காமம், திஸ்ஸ பகுதிகளில் நான் செயற்பட்டதாகவும், தன்னைபோல் நாடு முழுக்க பல குழுக்கள் இருந்ததாகவும், எனினும் அங்கு நடந்தவை பற்றி எனக்கு தெரியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தூக்கப்படுபவரை மொனராகலையிலுள்ள ஒரு இடத்திற்கு கொண்டு சென்று அங்கு அதற்காக தாயாரான அறையொன்றில் அடைத்து வைத்து விசாரரிக்கும்போது கண்கள் கட்டப்பட்டு சித்திரவதை நடக்கும் என்பதோடு அவர்களின் நகங்களை பிடுங்கி கைகளை வெட்டி , கத்தியால் குத்துவோம் எனவும் கடத்தப்பட்டவர்களிற்கு இடம்பெற்ற கொடூரங்களை விவரித்துள்ளார்.

அதன்பின்னர் சித்திரவதை தொடர்பான கோப்பு ஒன்றை மேலிடத்திற்கு ஆனுப்பிய பின்னர் அங்கிருந்து இன்னொரு ஆவணம் வரும் என்றும், அதில் வேலையை முடிக்கும்படி குறிப்பிடப்பட்டிருக்கும் எனவும் அதன் அர்த்தம் கொலை செய்வது என்றும் குறித்த நபர் தெரிவித்துள்ளார்.

கொலை செய்த பின்னர் மொனராகலை பகுதியிலுள்ள வாவியொன்றிற்குள் முதலைகளிற்கு உணவாக அந்த உடல்களை வெட்டி உடலுக்குள் உள்ளவையை அகற்றிய பின்னர் உடல்களை வாவிக்குள் போடுவோம் எனவும் குறித்த நபர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வீடுதான் சித்திரவதை கூடமாக இருந்ததாகவும் அத பக்கத்தில் வாகன கராஜ் உள்ளது வாகனத்தரிப்பிடத்திலிருந்து வாகனம் பின்பக்கமாக எடுக்கப்படும். முதலில் இலக்கத்தகடு மாற்றப்படும். அதன்பின்னர் வாகனத்தில் நகரை தூக்குவோம். ஆனால் வேறு வாகனத்திலேயே கொண்டு வரவார்கள். நபரை தூக்கிய வாகனம் 3,4 மணித்தியாலங்களின் பின்னரே திரும்பும். யாராவது பின்தொடர்ந்தால் அடையாளம் காணாமலிருக்க இந்த ஏற்பாடு என்றும் அவர் கூறியுள்ளார்.

அந்த இடத்தல் தற்போது 15வது இராணுவ மாணவர் படையணி முகாம் உள்ளது. 2008, 2009 வரை அங்குதான் கடத்தல் முகாம் அமைந்திருந்தது. மொனராகலை நகரில் கணக்காளர் திணைக்களம் அமைந்துள்ள வீதிப்பகுதியில் இந்த இடம் உள்ளதாகவும் இது குறித்து விசாரணை நடந்தால் பூரண ஒத்துழைப்பு கொடுப்பேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை கோத்தபாயவின் இந்த நடவடிக்கைக்கு இராணுவம், பொலிஸ் பூரண ஒத்துழைப்பளித்ததாக கூறிய அவர் உதாரணமாக, மொனராகலை பகுதியில் ஒருவரை தூக்கினால், அந்த பகுதி பொலிஸ் பொறுப்பதிகாரியை தொடர்பு கொண்டு, ஒருவரை தூக்கி விட்டதாக அறிவிக்கப்படும் என்றும் யார், என்ன, எங்கே என்ற விபரத்தை சொல்வதில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் உடல்களை போட்ட வாவிக்கு நான் செல்லவில்லை என்றும் , தூக்குவது ஒரு அணி, கொல்வது ஒரு அணி, உடல்களை அப்புறப்படுத்துவது ஒரு அணி என்றும் கூறிய குறித்த நபர் அந்த வாவிக்குள் நூற்றுக்கணக்கான முதலைகள் இருந்ததாகவும் உடல்களை வீசி எறிந்தவுடன் அவை உண்டு விடும் என்றும், ஒருவேளை அங்கு ஆய்வு நடத்தினால் சில வேளைகளில் எலும்புக்கூடுகள் மீட்கப்படலாம் என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.