267 கைதிகளை விடுவித்த மைத்திரி!!

1 jail
1 jail

சிறைச்சாலைகளிலுள்ள கைதிகள் 267 பேருக்கு தேர்தலின் பின்னர் விடுதலை வழங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒப்பமிட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் பந்துல ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

கொலை, கொள்ளை, பாலியல் துஸ்பிரயோகம், சிறுவர் துஸ்பிரயோகம், போதைப் பொருள் வியாபாரம் மற்றும் திட்டமிட்ட குற்றச் செயல்கள் ஆகிய 40 குற்றச் செயல்களுடன் தொடர்பில்லாத கைதிகளே இவ்வாறு விடுதலை செய்யப்படவுள்ளதாகவும் ஆணையாளர் கூறியுள்ளார்.

65 வயதைத் தாண்டிய சிறைக் கைதிகளுக்கு இந்த வாய்ப்பை வழங்கவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.