இங்கிலாந்தின் கடற்கரைப் பகுதியில் டெப்ரா ஒலிவர் என்பவர் ஒசாமா பின்லேடனின் உருவத்தையொத்த சிப்பி ஒன்றினை கண்டெடுத்துள்ளார்.
இது தொர்பில் அவர் தெரிவிக்கையில்;
‘கோடிக்கணக்கான சிப்பிகள் கடற்கரையில் கிடந்தன. அங்கு உலாவிக்கொண்டிருந்த போது திடீரென மனித முகம் போன்ற சிப்பி என் கவனத்தை ஈர்த்தது. பின்பு அதை கையில் எடுத்து உன்னிப்பாக பார்க்கையில், கொல்லப்பட்ட பயங்கரவாத இயக்க தலைவன் பின்லேடனைப் போன்று தோற்றமளித்தது. அதை ஒரு நினைவுப்பொருளாக எடுத்து வந்தேன். பின்லேடனின் உடல் கூட கடலில் தான் வீசப்பட்டது’ என தெரிவித்தாதுள்ளார்.