தபால் மூல வாக்களிப்பு முடிவுகள் 16 ஆம் திகதி நள்ளிரவு

50 fdf
50 fdf

எதிர்வரும் 16 ஆம் திகதி நடைபெறவுள்ள 8 ஆவது ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான முதல் முடிவை பெரும்பாலும் அன்றைய தினம் நள்ளிரவு 12.00 மணிக்கு வெளியிடக்கூடியதாக இருக்கும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவின் தலைமையில் நேற்று மாலை அரசாங்க தகவல் திணைக்களத்தில் செய்தியாளர் மாநாடு நடைபெற்றது.

செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த ஆணைக்குழு தலைவர் தேர்தல் முடிவுகளில் தபால்மூல வாக்குகள் தொடர்பான பெறுபேறுகளை நள்ளிரவு 12.00 மணிக்கு வெளியிடக்கூடியதாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.