பிரியாவிடை பெறும் மைத்திரிபால சிறிசேன

sirisena1
sirisena1

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது பதவிக் காலத்தில் ஜனாதிபதி செயலகத்தில் கலந்துகொள்ளும் இறுதிக் கூட்டம் இன்று (Nov.14) ஜனாதிபதி செயலாளர் உதய ஆர். செனவிரத்ன தலைமையில் இடம்பெறவுள்ளது.

அரச வைத்தியசாலைகளுக்கு உபகரணங்களை வழங்குதல், இரட்டைக் குழந்தைகளுக்கு ஜனாதிபதி செயலக நிதியிலிருந்து உதவி வழங்குதல், ஜனாதிபதி செயலணியின் வினைத்திறன் விருதை ஜனாதிபதியிடம் கையளிக்கும் நிகழ்வு போன்று பல்வேறு நிகழ்ச்சிகள் இன்று இடம்பெறவுள்ளன.

இன்று நண்பகல் முதல் மாலை வரையில் ஜனாதிபதி செயலகத்தில் இந்த நிகழ்ச்சிகள் இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.