வழிபாட்டு தலங்களிற்கு விதிக்கப்பட்டுள்ள தடை

1 Mahind
1 Mahind

நேற்றைய தினம் நள்ளிரவுடன் தேர்தல் பிரசார பணிகள் நிறைவடைந்துள்ளமையினால் விகாரைகள், கோவில்கள், கிறிஸ்தவ ஆலயங்கள் மற்றும் முஸ்லிம் பள்ளிவாயல்கள் என்பவற்றிலும் ஒரு வேட்பாளரை ஆதரித்து வழிபாடுகள் இடம்பெறுவதாகவும் எனவே இவற்றிலிருந்து சமயத் தலைவர்கள் தவிர்ந்து கொள்ளுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

பகுதி நேர வகுப்புக்களில் இவ்வாறான நிகழ்வுகள் இடம்பெறுவதனை தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அவ்வாறான செயற்பாடுகள் நடைபெற்றுள்ளதாக 10 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் இவைகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.