வேட்பாளர்களை சந்திக்கும் மஹிந்த தேசப்பிரிய

Sri Lanka Election Commission
Sri Lanka Election Commission

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவிற்கும் தேர்தலில் போட்டியிடுகின்ற 35 வேட்பாளர்களுக்குமடையிலான முக்கிய சந்திப்பொன்று இன்று காலை இடம்பெறவுள்ளது.

வாக்குப்பதிவுகள், வாக்கு எண்ணும் பணிகள் மற்றும் பெறுபேறுகளை வெளியிடும் பணிகள் ஆகிய விடயங்கள் தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது.

ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டால், அவர்களது பிரதிநிதிகள் இருவர் கலந்துகொள்ள வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.