தேர்தலை முன்னிடட்டு மதுபானசாலைகள் பூட்டு

Bar Closed
Bar Closed

ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு இரண்டு தினங்களுக்கு மதுபான சாலைகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கலால் திணைக்களம் அறிவித்துள்ளது.

தேர்தல் நேரங்களில் குழப்பங்கள் ஏற்படுத்தாத வகையில் பொதுமக்கள் நடந்துகொள்ள வேண்டும் என்பதற்காக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை மதுபான சாலைகளை மூடுவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

தேர்தல் வாக்குச் சாவடிகள், வாக்கெண்ணும் நிலையங்களின் பாதுகாப்பு கருத்தில் கொண்டும் மக்களின் பாதுகாப்பையும், மக்களின் ஈடுபாட்டை கருத்தில் கொண்டும் இந்த தீர்மானம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.