மீண்டும் கட்சியின் பதவியை பெற்றுக்கொள்கிறார் சிறிசேன

sirisean
sirisean

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையிலிருந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விலகியிருந்த நிலையில் மீண்டும் தலைமைப் பதவியினை பொறுப்பேற்கவுள்ளதாக அக்கட்சியின் பதில் தலைவர் பேராசிரியர் ரேஹண லக்ஸ்மன் பியதாச தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவிற்கு ஆதரவு வழங்க தீர்மானித்தமையின் காரணமாக தலைமைப் பதவியிலிருந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நீங்கிக் கொண்டதாகவும், தேர்தல் பெறுபேறுகள் வெளியானவுடன் மீண்டும் கட்சித் தலைமையை அவர் ஏற்கவுள்ளதாகவும் அக்கட்சியின் பதில் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.