கல்முனை சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்- முதியவருக்கு பிணை

kalmunai
kalmunai

கல்முனை பாடசாலை மாணவியை துஷ்பிரயோத்திற்குட்படுத்திய கல்முனைக்குடி பிரதேசத்தை சேர்ந்த 58 வயதுடைய செய்யது அப்துல் கரீம் என்பவரிற்கு கல்முனை நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

சந்தேக நபர் கல்முனை நீதிமன்ற நீதவான் ஐ.என்.றிஸ்வான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தார்.

சந்தேக நபர் பிரத்தியேக வகுப்பிற்கு சென்று வந்த 08 வயது பாடசாலை மாணவியை கடந்த ஓகஸ்ட் மாதம் 31ஆம் திகதி வழிமறித்து தனது வீட்டிற்குள் அழைத்து பாலியல் ரீதியில் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமி வசிக்கின்ற பிரதேசத்திற்கு செல்லவோ அதே பிரதேசத்தில் வாழவோ கூடாது என்றும் சிறுமியின் குடும்பத்தார் தரப்பிலிருந்து குறித்த சந்தேக நபருக்கு எந்த விதமான பிரச்சனைகளும் மேற்கொள்ளக்கூடாது என்ற நிபந்தனை விதிக்கப்பட்டதுடன் குறித்த சிறுமி பெற்றோரின் பாதுகாப்பில் வளர்க்கப்பட வேண்டும் என்றும் சிறுமியை சிறந்த மனநல வைத்திய அதிகாரி ஒருவரிடம் உளநல ஆலோசனை பெற வேண்டும் எனவும் நீதிபதி உத்தரிவிட்டுள்ளார்.

சந்தேக நபரது வழக்கு விசாரணை எதிர்வரும் ஜனவரி 20ம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என கல்முனை நீதிமன்ற நீதிவான் கட்டளை பிறப்பித்தார்.