சமூக வலைத்தல பாவனையில் தற்போது பேஸ்புக் தவிர்க்க முடியாத ஒன்றாக விளங்குகிறது. பேஸ்புக்கில் போலிக்கணக்குகள் உருவாக்கப்படுவது வாடிக்கையாக உள்ளது. இவற்றின் மூலம் வரும் தீமைகள் ஏராளம்.
இந்நிலையில், பேஸ்புக்கில் இந்த ஆண்டு 540 கோடி போலிக்கணக்குகளை தடை செய்துள்ளதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
‘போலியான மற்றும் தவறான கணக்குகளை உருவாக்குவதற்கான முயற்சிகளைக் கண்டறிந்து தடுக்கும் திறனை நாங்கள் மேம்படுத்தியுள்ளோம். இந்த கண்டறிதல் முறைகளை மூலம் ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான போலிக் கணக்குகள் உருவாக்கம் தடுக்கப்படுகிறது’, என அந்நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.