தமிழ் மக்களை வாக்களிக்காது தடுக்க புதிய யுக்தி!

alkohol
alkohol

தமிழ் மக்களை வாக்களிக்காது தடுக்கும் நோக்கில் விஷ மதுபான போத்தல்கள் விநியோகிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

அண்மையில் கூட்டமைப்பில் இருந்து பிரிந்த பாராளுமன்ற உறுப்பினர் மட்டக்களப்பில் தேர்தல் கூட்டத்தின் பிறகு ஆண், பெண் வயது பேதமின்றி சகலருக்கும் மதுபானம் வழங்கியதாகவும் இதனால் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த மதுபானத்தினை குடித்த பலர் இரண்டு நாட்களாகியும் இன்னும் போதை தெளியாமல் மயக்க நிலையில் காணப்படுவதாகவும் சிலருக்கு கண் பார்வை தெளிவில்லாமல் மயங்கிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழ் மக்கள் வாக்களிப்பதனை தடுக்கும் நோக்கிலேயே இவ்வாறான விஷ மதுபானம் தமிழ் பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.