வாழைச்சேனை இந்துக்கல்லூரி தேசிய பாடசாலையாக தரமுயர்வு

Education ministry
Education ministry

கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி மாகாணசபைகளிற்குட்பட்ட நான்கு பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தப்பட்டுள்ளன.

கல்குடா வலயத்தின் முதலாவது தேசிய பாடசாலையாக வாழைச்சேனை இந்துக்கல்லூரி தரமுயர்த்தப்பட்டுள்ளது.

காலி போனவிஸ்டா கல்லூரி, மட்டக்களப்பு புனித மைக்கல் கல்லூரி, வாழைச்சேனை இந்துக்கல்லூரி, அம்பாறை இறக்காமம் அல்/அஷ்ரஃப் கல்லூரி ஆகிய நான்கு பாடசாலைகளே இவ்வாறு தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தப்பட்டுள்ளன.

இந்த நான்கு பாடசாலைகளும் தரமுயர்த்தப்பட்டுள்ளதுடன், நாட்டிலுள்ள தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கை 374 ஆக அதிகரித்துள்ளது.