கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி மாகாணசபைகளிற்குட்பட்ட நான்கு பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தப்பட்டுள்ளன.
கல்குடா வலயத்தின் முதலாவது தேசிய பாடசாலையாக வாழைச்சேனை இந்துக்கல்லூரி தரமுயர்த்தப்பட்டுள்ளது.
காலி போனவிஸ்டா கல்லூரி, மட்டக்களப்பு புனித மைக்கல் கல்லூரி, வாழைச்சேனை இந்துக்கல்லூரி, அம்பாறை இறக்காமம் அல்/அஷ்ரஃப் கல்லூரி ஆகிய நான்கு பாடசாலைகளே இவ்வாறு தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தப்பட்டுள்ளன.
இந்த நான்கு பாடசாலைகளும் தரமுயர்த்தப்பட்டுள்ளதுடன், நாட்டிலுள்ள தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கை 374 ஆக அதிகரித்துள்ளது.