சென்னை அணி 5 வீரர்களை விடுவித்தது

chennai
chennai

ஐ.பி.எல் 2020 இற்கான வீரர்களை தெரிவு செய்வதற்கான ஏலம் கொல்கத்தாவில் இடம்பெறவுள்ள நிலையில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 05 வீரர்களை விடுவித்துள்ளது.

சாம் பில்லிங்ஸ், சைதன்ய பிஷ்னாய், துருவ் ஷோரி, டேவிட் வில்லே, மோஹித் சர்மா ஆகிய வீரர்களையே சென்னை அணி விடுவித்துள்ளது.

இந்த ஐந்து வீரர்களை விடுவித்ததன் மூலம் சென்னை அணிக்கு 12 கோடி ரூபா கிடைத்துள்ளது. இதனால் 12 கோடி ரூபாவுடன் இந்த வருட ஏலத்தை அந்த அணி எதிர்கொள்ளவுள்ளது.