அடுத்த 5 ஆண்டுகளில் நாட்டின் தலைவிதியை தீர்மானிக்கும் ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்று ஆரம்பமாகியுள்ளது.
இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகியது.மாலை 5 மணிக்கு வாக்களிப்பு நிறைவடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்தலில் 1கோடியே 59 இலட்சத்து 92ஆயிரத்து 96 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளனர். 12 ஆயிரத்து 815 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
35 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
வழக்கம் போல் முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் வெளியிடப்படும். முதலாவது முடிவு இன்று நள்ளிரவின் பின்னர் வெளியாகும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.