அனைத்து வாக்களிப்பு நிலையங்களிலும் சுமுகமான தேர்தல் நடைபெறுவதனை உறுதிப்படுத்தும் நோக்கில் ஒவ்வொரு வாக்களிப்பு மத்திய நிலையங்களிலும் இரண்டு பொலிஸார் வீதம் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடாக பேச்சாளரும் பொலிஸ் அத்தியகட்சகருமான ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
அத்துடன் வாக்களிப்பு நடவடிக்கைகளுக்கு முழு அளவிலான அனைத்து பங்களிப்புகளையும் வழங்க தாயார் எனவும் பொலிஸ் பாதுகாப்பிற்கு மேலதிகமாக நடமாடும் சேவை முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
வாக்களித்த பின்னர் வாக்காளர்கள் வாக்களிப்பு மத்திய நிலைய பகுதியில் நடமாடுவதை தவிர்த்துக்கொள்ளுமாறு அவர் வாக்காளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.