வவுனியாவில் மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு

91
91

2019 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. மாலை 5 மணி வரை வாக்களிக்க பொதுமக்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

இந் நிலையில் வவுனியாவில் மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். இன்று காலை காலை 7.00 மணி தொடக்கம் 8.00 மணி வரையிலான காலப்பகுதியிலேயே வாக்களிப்பு மையங்களில் அதிக மக்கள் திரண்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.

குறிப்பாக நெளுக்குளம், இராசேந்திரகுளம், பண்டாரிக்குளம், கூமாங்குளம் மற்றும் வவுனியா நகரிலுள்ள வாக்குச்சாவடிகளில் காலையில் மக்கள் அதிகளவில் வாக்களிப்பதினை அவதானிக்க முடிந்தது.

அத்துடன் பொலிஸார் வாகனங்களில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதுடன் தேர்தல் கண்காணிப்பாளர்களும் கண்காணிப்பு கடமையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றனர்.