வாக்கு சீட்டை படம் எடுத்த ஊடகவியலாளர் கைது!!

7 s
7 s

வாக்களிப்பு நிலையத்திற்குள் நின்று தனது வாக்கு சீட்டை புகைப்படம் எடுத்த முல்லைத் தீவு ஊடகவியலாளர் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேபோல் இராணுவ சிப்பாய் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் , இதே குற்றச்சாட்டில் கடற்படைச் சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

இதேவேளை வாக்களிப்பு நிலையத்துக்குள் அலைபேசியை எடுத்துச் செல்லவேண்டாம் என

பொலிஸ் தலைமையகம் அறிவுறுத்தல் வழங்கியிருந்தது.

இந்த நிலையில் குறித்த நபர்கள் தமது வாக்குச்சீட்டை ஒளிப்படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவேற்றிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.