நாடளாவிய ரீதியில் 50 சதவிகித வாக்குப்பதிவு

5 s
5 s

நாடளாவிய ரீதியில் நடைபெற்று வருகின்ற ஜனாதிபதித் தேர்தலில் 50 சதவிகித வாக்களிப்பு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

காலை 7 மணி தொடக்கம் நண்பகல் 12 மணிவரையிலான காலப்பகுதியில் நாடு முழுவதும் 50% வாக்குப்பதிவுகள் இடம்பெற்றுள்ளன. வாக்குப்பதிவுகளின் விபரம்,

  • மாத்தளை -65%
  • பொலன்னறுவை-60%
  • பதுளை-60%
  • புத்தளம் -60%
  • கண்டி – 60%
  • காலி -60%
  • குருநாகல்-55%
  • நுவரெலியா- 55%
  • மொனராகலை-55%
  • இரத்தினபுரி -55%
  • ஹம்பாந்தோட்டை – 55%
  • கிளிநொச்சி – 50%
  • மாத்தறை -50%
  • அநுராதபுரம் -50%
  • வவுனியா -50%
  • மன்னார்-48%
  • அம்பாறை-48%
  • யாழ்ப்பாணம்-44%
  • மட்டக்களப்பு -44%
  • கொழும்பு -40%
  • முல்லைத்தீவு -25%