தபால்மூல வாக்களிப்பில் கோத்தபாய முன்னிலை

92
92

இலங்கையின் 2019 ஜனாதிபதித் தேர்தல் இன்றுகாலை 7 மணிக்கு ஆரம்பமாகி இடம்பெற்று சற்றுமுன்னர் நிறைவடைந்துள்ளது.

தற்பொழுது வாக்குப் பெட்டிகள் வாக்குகள் எண்ணும் மத்திய நிலையத்திற்கு கொண்டு செல்லும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தபால் மூல வாக்குகளை எண்ணும் பணிகள் 05.15 மணி முதல் முன்னெடுக்கப்படவுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அந்தவகையில் தபால்மூல வாக்களிப்பில் 50 வீதத்திற்கு மேலாக பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரான கோத்தபாய ராஜபக்க்ஷ முன்னேறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.