சற்றுமுன்னர் நிறைவடைந்தது வாக்களிப்பு

ase
ase

இலங்கையின் எட்டாவது ஜனாதிபதியை தெரிவு செய்யும் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு சற்றுநேரத்திற்குமுன்னர் நிறைவடைந்தது.

இன்று காலை 7 மணி தொடக்கம் பிற்பகல் 5 மணிவரை பொதுமக்கள் வாக்களிக்கும் வகையில் 12 ஆயிரத்தை 845 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டது.

இந் நிலையில், நாடளாவிய ரீதியில் வாக்களிப்பு மிகவும் சுமுகமான நிலையில் இடம்பெற்றது.

இம்முறை ஜனாதிபதி தேர்தலுக்காக ஒரு கோடியே 59 இலட்சத்து 94 ஆயிரத்து 96 பேர் வாக்களிக்க தகுதிபெற்றிருந்தனர்.

சற்றுமுன்னர் வாக்களிப்பு நிறைவடைந்துள்ள நிலையில் வாக்குப் பெட்டிகள் வாக்குகள் எண்ணும் மத்திய நிலையத்திற்கு கொண்டு செல்லும் நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது.