வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பம்!!

1 gyuhj
1 gyuhj

இலங்கையில் எட்டவாது ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்புக்கள் நிறைவடைந்து, தபால்மூல வாக்குகள் எண்ணப்பட்டு கொண்டிருக்கின்றன.

நாடு முழுவதும் வாக்களிப்பு இன்று மாலை 5 மணிக்கு நிறைவடைந்ததை தொடர்ந்து, வாக்குப்பெட்டிகள் வாக்கெண்ணும் மையங்களிற்கு எடுத்து செல்லப்பட்டு வருகின்றன. வாக்குப்பெட்டிகளிற்கு பொலிசார் கடும் பாதுகாப்பு வழங்கியுள்ளனர்.

இதேவேளை, நாடளாவிய ரீதியில் இம்முறை 80 வீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

அந்தவகையில் கம்பஹா 82% வாக்குகளும் களுத்துறையில் 80% வாக்குகளும் கண்டியில் 80% வாக்குகளும் நுவரெலியாவில் 80% வாக்குகளும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.