யாழ்.வட்டுக்கோட்டையில் 11ம் திகதி தொடக்கம் காணாமல் போயிருந்த யசோதா என்பவர் நவீன சந்தை கட்டடத்து அருகாமையில் உள்ள பாழடைந்த கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சங்கரத்தை, திருஞான சம்பந்தா வீதியைச் சேர்ந்த யசோதா எனும் ஒரு பிள்ளையின் தாயாரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார்.
இதேவேளை குறித்த பெண் கடந்த திங்கட்கிழமை தொடக்கம் காணாமற்போனதாக அவரது மகன் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.